தேசிமட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் போட்டியில்(2024) பங்கு பற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு
Posted On : 2025-06-09 05:56:59
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியிலிருந்து தேசிய மட்டத்தில் அனைத்து கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்களுக்கிடையிலான போட்டியில் பங்குபற்றி முதலாம் இரண்டாம் மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவ ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வானது பீடாதிபதி திரு இராசையா யோகேஸ்வரன் தலைமையில் 20.05.2025 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு. வே.நந்தகுமார் மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறியைச் சேர்ந்த மாணவ ஆசிரியர்களான Miss. Ragunadan Kreshani and Miss. Zeenath Minha ஆகியோர் 16th National level school ICT Championship – 2024 இல் பங்கு பற்றி தேசிய ரீதியில் 1st Place, 2nd Place இல் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.04.2025 அன்று கல்வியமைச்சில் நடைபெற்றது. போட்டியில் பங்கு பற்றிய ஏனைய 20 மாணவர்கள் பங்குபற்றுநர் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். 1. Abdullah Saroth Jahani 2. Jeyananthan Tharchchana 3. Arudselvam Venusha 4. Keshambavi Kodeeswaran 5. Kesuwalingam sulaxshini 6. Mathiyalakan Inthuja 7. Nadesalingam Thamiliny 8. N.F.Nisra 9. Thiruchelvam Partheepa 10. Vinayakamoorththi Varmila 11. A.R.Fathima Rifha 12. Parameswaran Kokulrajh 13. U.Harisankar 14. Iruthayaraja Roshan 15. M.K.S Mohamed Shabeeb 16. A.M.Ashraff 17. Baseer Mohamed Mufaris 18. Gobalakkrishanan Nithusan 19. M.U Atheef Mohamed 20. N. Mohamed Afnan மாணவ ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு. வே. நந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக விரிவுரையாளர் செல்வி இந்துறேகா அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தார். போக்குவரத்து அநுசரணையின் ஒரு பகுதி விரிவுரையாளர் அம்பிகைபாகன் அவர்களின் வழிப்படுத்தலுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்கியிருந்து.